Quote of the Day

பழமொழிகள்: அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

Google Mobile Apps
Apple Mobile Apps
Leaderboard
sivam 310
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
·
Added article
·

தளபதிக்குப் பின் மம்முட்டியை ஒதுக்கிய ரஜினி… மீண்டும் இணைய மறுத்த கூட்டணி… எந்தப் படத்தில் தெரியுமா?

மணிரத்னம் இயக்தில் தமிழ் சூப்பர் ஸ்டாரும், மலையாளத்தின் மெகா ஸ்டாரும் இணைந்து நடித்த படம் தான் தளபதி. மகாபாரத இதிகாசத்தில் வரும் கர்ணன்-துரியோதனன் கதையைத் தழுவி நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படம் ‘ஆறிலிருந்து அறுபது வரை‘ படத்திற்குப் பின் ரஜினி என்ற நல்ல நடிகனை வெளிக் கொண்டு வந்தது.

முற்றிலும் ஸ்டைல், பஞ்ச் வசனங்கள் இல்லாமல் அமைதியான நடிப்பில் மணிரத்னத்திற்கே உருவான இயல்பான இயக்கத்தில் ரஜினி-மம்முட்டி இருவரும் நீயா நானா என போட்டி போட்டு நடித்திருப்பார்கள்.

நட்புன்னா என்னான்னு தெரியுமா.. சூர்யான்னா என்னான்னு தெரியுமா? என மம்முட்டி – ரஜினியின் கதாபாத்திரங்களான சூர்யா-தேவா என அசத்தியிருப்பார்கள். இதனையடுத்து மீண்டும் இந்தக் கூட்டணி இந்தக் கூட்டணி இணையுமா என்ற எதிர்பார்ப்பில் இருக்க பாட்ஷா படத்தின் பணிகள் ஆரம்பமானது.

ரியல் அன்வர் பாட்ஷா கேரக்டரில் மம்முட்டியை நடிக்க வைக்கலாம் என படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சொல்ல ரஜினி அதை மறுத்திருக்கிறார். ஏனென்றால் இருவரும் தற்போது தான் தளபதி படத்தில் நடித்திருக்கிறோம். மேலும் பாட்ஷா கதையும் நட்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை எனவே இரு படங்களும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று சொல்ல சுரேஷ் கிருஷ்ணாவும் அதை ஒப்புக் கொண்டார்.

பின்னர் பாட்ஷா கேரக்டருக்கு யாரைப் போடலாம் என விவாதம் எழ ஜென்டில் மேன் படத்தில் முரட்டு போலீஸ் அதிகாரியாக நடித்து புகழ் பெற்ற சரண்ராஜ் நினைவு ரஜினிக்கு வரவே அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

கதைப்படி ஒரிஜினல் பாட்ஷா என்றால் அது சரண்ராஜ் தான். எனவே படத்தின் டைட்டிலும் அவரது கதாபாத்திரப் பெயரிலேயே அமைந்ததால் சரண்ராஜ்க்கு இந்தப்படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆனது. படத்தில் இருவரும் நண்பர்கள். மாணிக்கமாக ரஜினி நடிக்க அன்வர் பாட்ஷாவாக சரண்ராஜ் நடித்திருப்பார்.

கதைப்படி சரண்ராஜ் இறந்து போக தனது நண்பர் பெயரைச் சேர்த்து மாணிக் பாட்ஷாவாக மும்பையின் டானாக உருவெடுத்து ரகுவரனை அதகளம் செய்யும் காட்சி இன்றளவும் பக்கா கமர்ஷியல் ஹிட் வரிசையில் முதலிடம் பெறுகிறது.

இப்படத்தின் கேரக்டர் குறித்து நடிகர் சரண்ராஜ் கூறுகையில், “நான்தான் பாட்ஷா என்று எனக்குத் தெரியாது. சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்தால் எப்படி புகழ் பெறுவோம் என்று பாட்ஷா நிரூபித்தது. மேலும் இன்றளவும் ரம்ஜான் பண்டிகை என்றால் பாட்ஷா படத்தில் நானும் ரஜினிசாரும் இணைந்து நடித்த காட்சிகளை அனுப்பி எனக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள்“ என்று கூறியுள்ளார்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரே படம் என்றால் அது பாட்ஷா மட்டுமே. தமிழ் திரையுலகில் முதல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த படமும் பாட்ஷாதான்.

  • 11
  • 11
·
Added a post
·

புண்ணியம் இருந்தால் மட்டுமே மீனாட்சி அம்மன் கோயிலில் இவரை தரிசிக்க முடியும்.

தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் மீனாட்சி அம்மன் கோயிலும் ஒன்று. இங்கு பலரும் அறிந்திடாத ஒரு முக்கியமான சிறப்பு இக்கோயிலில் அமைந்து உள்ளது. அதை பூர்வ ஜென்ம புண்ணியம் செய்தவர்களால் மட்டுமே தரிசனம் செய்யமுடியும் என்கிறார்கள்.

பொதுவாக மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் பொழுது நேராக அம்மனையும் சொக்கநாதரையும் மட்டுமே தரிசனம் செய்து வந்து விடுவோம். ஆனால், மீனாட்சி அம்மன் கோயிலில் அமையப்பெறாத சன்னதிகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இது பலருக்கும் தெரிவதில்லை அவ்வளவு தான். அப்படியாக, அங்கு கோயிலை சுற்றி வெளிப்புற பாதையில் பல அற்புத விஷயங்கள் மறைந்து உள்ளன. அவற்றில் ஒன்று தான் நாம் பலரும் அறிந்திடாத பாதாள குபேர பைரவர் சன்னதி.

மேலும், இந்த சன்னதி தினமும் ஒரு மணி நேரம் ராகு காலத்தில் மட்டுமே திறந்திருக்கும். அதாவது, ராகு காலம் துவங்கும் போது திறந்து, ராகு காலம் நிறைவடைவதற்குள் சன்னதி சாத்தப்பட்டு விடும்.

இந்த பைரவர் மிகவும் சக்தி வாய்ந்த பைரவராக வழிபாடு செய்யப்படுகிறார். அதாவது ஒருவர் வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்கள், பில்லி சூனியம் போன்ற விஷயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு இந்த பைரவரை வழிபாடு செய்ய அவை எல்லாம் விலகி மகிழ்ச்சியாக வாழ்வதாக சொல்லப்படுகிறது.

அதோடு இவரை ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்வதுதான் மிக சிறந்த பலனை கொடுக்கும். மேலும், இவரை வழிபாடு செய் யும் பொழுது புனுகு, எலுமிச்சை, செவ்வரளி வாங்கிக் கொண்டு அர்ச்சகரிடம் கொடுத்தா ல் செவ்வரளியை பைரவருக்கு சாத்தி விட்டு, எலுமிச்சை, புனுகை சுவாமியிடம் வைத்து நமக்கு தருவார்கள்.

பிறகு அதை கொண்டு வந்து வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் நம்முடைய கர்ம வினைக ள் யாவும் விலகி வாழ்க்கையே மாறுவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இவரை தரிசன ம் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

காரணம், இந்த சன்னதி கோவிலின் வடக்கு கோபுரம் மற்றும் தெற்கு கோபுரம் பாதைகள் சந்திக்கும் வாயு மூலையில் கோவிலின் வெளிப்புறத்தில் அமைந்து உள்ளது. கோவிலை சுற்றி போடப்பட்டுள்ள கம்பிகளுக்கு வெளியில், சாலையில் இருந்து மட்டுமே இந்த பைரவரை தரிசிக்க முடியும்.

மேலும், நமக்கு நேரம் நன்றாக உள்ளது என்றால் கட்டாயம் இவரின் தரிசனம் கிடைத்து விடும். ஆதலால், இனி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் பொழுது மறக்காமல் இந்த பைரவரை தரிசனம் செய்து வாருங்கள் வாழ்க்கையின் மாற்றத்தை பெறுங்கள்.

  • 12
  • 11
  • 11
  • 11
  • 11
  • 11
  • 10
  • 10

*லைசன்ஸ் தேவையில்லை...*

*ஹெல்மெட் தேவையில்லை...*

*போலீசைக் கண்டு பயப்படத்* *தேவையில்லை...*

*பெட்ரோல் விலையேற்றம்* *கண்டு*

*பயப்படத் தேவையில்லை...*

*நோய் நொடிகளிலிருந்தும்*

*விடுபடலாம்...*

*சுகர் வராது...*

*முதுகு வலி வராது...*

*என்றும் இளமைக்கு*

*ஓட்டுவோம் மிதிவண்டி.*

*சூன் - 03 😘

*உலக மிதிவண்டி தினம்.

  • 11
·
Added a news
·

அமெரிக்காவில் நிலவி வரும் அரசியல், பொருளாதார மற்றும் உலகளாவிய பாதுகாப்புப் பதற்றங்கள் காரணமாக, தஞ்சம் கோரும் நோக்கில் கனடாவில் சொத்துக்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

கனடாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான ராயல் லெபேஜ் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டின் முற்பாதியில் அமெரிக்காவில் இருந்து தங்களது இணையதளத்தைப் பார்வையிடுவோரின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் அதிரடியாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அடுத்தடுத்து அரங்கேறிய முக்கியப் பரபரப்புச் சம்பவங்களின் போது, கனடாவில் வீடுகளைத் தேடும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை மும்மடங்கு வரை அதிகரித்துள்ளது என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மினியாபோலிஸ் நகரில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரியால் 37 வயதான ரெனே குட் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஜனவரி 11 முதல் 17 வரையிலான வாரத்தில் ராயல் லெபேஜ் இணையதளத்திற்கு அமெரிக்காவில் இருந்து வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தை விட 78 வீதம் உயர்ந்தது.

ஈரான் உடனான போர் பதற்றம் மற்றும் அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஏப்ரல் 5 முதல் 11 வரையிலான வாரத்தில் இணையதளப் போக்குவரத்து முந்தைய வாரத்தை விட 125 வீதம் அதிகரித்தது.

இது 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 233 வீதம் கூடுதலாகும். "2026 இன் தொடக்க மாதங்கள் தொடர்ச்சியான அதிரடிச் செய்திகள், போர் அச்சம், பொருளாதார ஏற்ற இறக்கங்கள் மற்றும் உள்நாட்டு அரசியல் குழப்பங்களால் நிறைந்துள்ளன," என்று ராயல் லெபேஜ் நிறுவனத்தின் தலைவர் ஃபில் சோப்பர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற கொந்தளிப்பான காலங்களில், அமெரிக்கப் பொதுவாழ்வின் பதற்றங்களில் இருந்து தங்களை விலக்கிக் கொள்ள அமெரிக்கர்கள் கனடாவிற்கு இடம்பெயர்வது பற்றி சிந்திப்பது வழக்கமாகிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • 15
·
Added a news
·

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஸ்குவாமிஷ் பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் விழுந்து மாயமான இரண்டு பேடில்போர்டர்களை தேடும் பணி பல நாட்களுக்குப் பிறகு சோகத்தில் முடிவடைந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை பிற்பகல், மரின் மாகாண பூங்காவில் உள்ள பிரவுனிங் ஏரியில் பயணித்த இருவரும் திடீரென நீரில் விழுந்து மூழ்கியுள்ளனர். அவர்கள் இருவரும் நீண்ட நேரமாகியும் மேலே வராததைக் கண்ட அங்கிருந்த சாட்சி ஒருவர் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மரின் மாகாண பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டு வான்வழியாகவும், நீர்நிலைகளிலும் தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது.

இந்த கூட்டுத் தேடுதல் பணியில் ஸ்குவாமிஷ் தேடல் மற்றும் மீட்புக் குழு, பாதுகாப்பு அதிகாரி சேவை, தீயணைப்புத் துறை, அவசர சுகாதார சேவைகள் மற்றும் கனடிய பொலிஸ் ஹெலிகாப்டர் குழு உள்ளிட்ட பல அமைப்புகள் ஈடுபடுத்தப்பட்டன.

தொடர்ந்து பல நாட்களாக நீடித்த இந்த தீவிர தேடுதலின் முடிவில், செவ்வாய்க்கிழமை அன்று ஆர்.சி.எம்.பி.யின் நீருக்கடியிலான சிறப்பு மீட்புக் குழுவினர் ஏரியின் ஆழமான பகுதியில் இருந்து மாயமான இரு பேடில்போர்டர்களின் உடல்களையும் மீட்டுள்ளனர்.

இக்கட்டான இந்த சூழலில், தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் தங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அனைத்து சிறப்புப் பிரிவுகள் மற்றும் கூட்டாளி அமைப்புகளுக்கு ஸ்குவாமிஷ் ஆர்.சி.எம்.பி.யின் அதிகாரி சாஷா பேங்க்ஸ் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். 

  • 15

மனதை உருக்கிய காணொலி இதோ...

https://youtu.be/_GJaC3z59ic

  • 12
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு நட்பை புதுப்பிப்பீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். விவாதங்களை தவிர்க்கவும்.

ரிஷபம்: எதார்த்தமான பேச்சால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பால்ய நண்பர்கள் தேடி வருவர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

மிதுனம்: வறட்டு கவுரவத்துக்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். பணிச்சுமை, திடீர் பயணங்கள் வந்து போகும். கடன் பிரச்சினை அதிகமாகும். வியாபாரத்தில் லாபமுண்டு. பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று நடக்கவும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கடகம்: நீண்ட நாள் கனவு நனவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனம் வாங்குவீர். வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர். குழப்பம் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி உண்டு.

சிம்மம்: உற்றார் உறவினர்கள் உங்கள் வீடு தேடி வந்து பேசுவார்கள். குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்று வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

கன்னி: நீண்டநாளாக அடைக்கமுடியாமல் இருந்த கடனை இப்போது அடைக்கும் அளவுக்கு பணம் வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

துலாம்: தடைகள் உடைபடும். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை விலகும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனைகளை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் மதிப்புயரும்.

விருச்சிகம்: பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர்கள். பங்குதாரரை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் பணியாளர்களிடம் கனிவாக பேசவும்.

தனுசு: மனைவிவழியில் விட்டுக் கொடுத்து போகவும். திட்டமிட்ட பணியை அலைந்து திரிந்து முடிப்பீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும். அலுவலகத்தில் அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மகரம்: புதிய சிந்தனையால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.

கும்பம்: நீண்டநாட்களாக தடைபட்ட சுப நிகழ்ச்சிகள் கைகூடி வரும். பிள்ளைகள் மனம் விட்டுப் பேசுவார்கள். பண விஷயத்தில் கறாராக இருப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். வியாபாரத்தில் ஏற்றமுண்டு.

மீனம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் இருக்கும். தொழிலில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்.

  • 98
·
Added a post
·

ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 20 ஆம் தேதி புதன்கிழமை 3.6.2026.

இன்று இரவு 08.23 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

இன்று முழுவதும் பூராடம்.

இன்று காலை 07.58 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.

இன்று காலை 07.31 வரை வணிசை. பின்னர் இரவு 08.23 வரை பத்திரை. பிறகு பவம்.

இன்று அதிகாலை 05.51 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=532&dpx=2&t=1780456331

நல்ல நேரம்:

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 100

Good Morning...

  • 100
·
Added article
·

‘பரியேறும் பெரு​மாள்’, ‘கர்​ணன்’, ‘மாமன்​னன்’, ‘வாழை’, ‘பைசன் காள​மாடன்’ உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய மாரி செல்​வ​ராஜ் அடுத்து இயக்​கும் படத்​துக்கு ‘மஞ்​சணத்​தி’ என்று தலைப்பு வைக்கப்​பட்​டுள்​ளது.

நவ்வி ஸ்டூடியோஸ் சார்​பாக திவ்யா மாரி செல்​வ​ ராஜ் வழங்​கும் இந்​தப் ​படத்தை ஃபார்​சூன் என்​டர் ​டெ​யின்​மென்ட் நிறு​வனத்​தின் சுஷாந்த் பிர​சாத் இணைந்து தயாரிக்​கிறார். இளை​ய​ராஜா இசை அமைக்​கிறார். சென்​னை​யில் இளை​ய​ராஜா நடத்​திய இசை நிகழ்ச்​சி​யில் இப்​படத்​தின் தலைப்பு அறிவிக்​கப்​பட்​டது.

வேல்ஸ் பிலிம் இன்​டர்​நேஷனல் தயாரிப்​பில் தனுஷுடன் மாரி செல்​வ​ராஜ் இணை​யும் வரலாற்​றுத் திரைப்​படத்​தின் பணி​கள் ஏற்கெனவே நடை​பெற்று வரு​கின்​றன. அந்​தப் படத்​துக்கு ஏ.ஆர்.ரஹ்​மான் இசையமைக்​கிறார்.

இப்​படத்​துக்​காக விரி​வான முன்​த​யாரிப்பு பணி​கள் நடை​பெற்று வரு​வ​தால், அதற்​கிடையே ‘மஞ்​சணத்​தி’ படம் உரு​வாக இருக்கிறது. இதில் கயாடு லோஹர், பிரி​யங்கா மோகன் ஆகியோர் நாயகி​களாக நடிக்க இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

  • 177
·
Added a news
·

கனடா, இயற்கை எரிவாயு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் சாதனை படைத்துள்ளது.

இந்த மார்ச் மாதத்தில் 775.12 மில்லியன் ஜிகா ஜூல்கள் அளவுக்கு கனடா எரிசக்தி உற்பத்தி செய்துள்ளது.

இது, 2025 மார்ச் மாதத்தை ஒப்பிடும்போது 5.6 சதவிகிதம் அதிகமாகும். பிரிட்டிஷ் கொலம்பியாவில் 13.8 சதவிகிதமும், ஆல்பர்ட்டாவில் 1.2 சதவிகிதமும் எரிவாயு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இப்போது கனடா, அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகுக்கே அதிக அளவில் எரிவாயு ஏற்றுமதி செய்துவருகிறது.

கனடா ஏற்றுமதி செய்யும் இயற்கை எரிவாயுவின் அளவு 7.4 சதவிகிதம் உயர்ந்து 339. 7 மில்லியன் ஜிகா ஜூல்களாக ஆகியுள்ளது.

கனடாவிலிருந்து அதிகம் எரிவாயு வாங்கும் நாடாக திகழும் அமெரிக்கா, மார்ச் மாதத்தில் மட்டும் 282.1 மில்லியன் ஜிகா ஜூல்கள் எரிவாயு வாங்கியுள்ளது. என்றாலும், 2025 மார்ச் மாதத்தை ஒப்பிடும்போது, இது 10.8 சதவிகிதம் குறைவு ஆகும். அமெரிக்கா தவிர்த்து மற்ற நாடுகளுக்கு கனடா ஏற்றுமதி செய்யும் எரிவாயுவின் அளவு, இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது, சாதனை அளவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • 178
  • 174
  • 175
  • 177
  • 177
  • 176
New People