காய்ச்சல் தடுப்பூசி ஏற்றுகை தொடர்பில் கனடிய அரசாங்கம் விசேட அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
ஒன்டாரியோ மாகாணத்தில் மூத்த குடிமக்கள், நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்த வாரம் முதல் காய்ச்சல் (Flu) தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
எதிர்வரும் அக்டோபர் 27 முதல், ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஒன்டாரியோ மாநில மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற கனடிய மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் அக்டோபர் நடுப்பகுதியில் இருந்து காய்ச்சல் தடுப்பூசி திட்டங்கள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிய குழந்தைகள், மூத்தவர்கள், ஆஸ்துமா மற்றும் COPD (chronic obstructive pulmonary disease) உடையோர் அதிக ஆபத்தில் உள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி காய்ச்சலை முற்றிலும் தடுப்பதில்லை, ஆனால் தொற்றை லேசாக ஆக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தடுக்க உதவுகிறது என அறிவுறுத்தியுள்ளனர்.
தடுப்பூசி போட்ட 2 வாரங்களுக்கு பிறகே பாதுகாப்பு விளைவுகள் உருவாகும் என தெரிவித்துள்ளனர். இந்த காய்ச்சல் தடுப்பூசி, மருத்துவரை அணுக வேண்டிய நிலை அல்லது மருத்துவமனை அனுமதிக்கப்பட வேண்டிய நிலையை சுமார் 50 வீதத்தினால் குறைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓடும் ரயிலில் ஏற முடியாமல் விழுந்த நடிகை, உடனே கைகொடுத்த ராம்கி; காதலில் விழுந்த த்ரோபேக் சம்பவம்!
நடிகை நிரோஷாவை விபத்தில் இருந்து காப்பாற்றியது குறித்து நடிகர் ராம்கி மனம் திறந்துள்ளார்.
80-களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை நிரோஷா. சினிமா பின்புலத்தில் இருந்து வந்த நடிகை நிரோஷாவின் அப்பா, அக்கா, அண்ணன்கள் என அனைவரும் சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்கள்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடிகை நிரோஷா நடித்துள்ளார். இவர் தற்போதும் தன்னுடைய நடிப்பை தொடர்ந்து வருகிறார். சில படங்களில் துணை கதாபாத்திரம் வேடத்திலும், சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
நடிகை நிரோஷா நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். என்னதான் இவர்கள் நட்சத்திர ஜோடியாக இருந்தாலும் தொடக்கம் முதலே இவர்கள் இருவருக்கும் சினிமாவில் செட்டாகவில்லை என்று கூறப்படுகிறது.
அதாவது, நிரோஷா - ராம்கி இருவரும் நிறைய படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். ஆனால், பெரும்பாலும் படப்பிடிப்பு தளத்தில் இருவரும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்களாம். இப்படி இருந்த மோதல் தான் பின்னாளில் காதலாக உருவெடுத்துள்ளது.
’செந்தூரப்பூவே’ படப்பிடிப்பின் போது நடிகை நிரோஷா விபத்தில் சிக்கியுள்ளார். அப்போது நடிகர் ராம்கி தான் அவரை காப்பாற்றியுள்ளார். இதன்பிறகு இருவரும் நண்பர்களாகியுள்ளனர். பின்னர் அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நடிகை நிரோஷாவை விபத்தில் இருந்து காப்பாற்றியது குறித்து நடிகர் ராம்கி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, "இயக்குநர் ஆபாவாணன் சாரோட படம் எப்போது பிரமாண்டமாக இருக்கும்.
ஒரு சண்டைக் காட்சி எடுத்துக் கொண்டிருந்தார். நான் ஓடுகிறேன், ரயில் ஓடுகிறது. அதாவது, நான் ஓடிபோய் ரயிலில் ஏற வேண்டும். அப்பறம் நிரோஷா ஏற வேண்டும். இதுதான் காட்சி. நிரோஷாவிற்கு ஓடி வர தெரியவில்லை.
ரயிலுக்கு இடையில் மாட்டிக் கொண்டார். அதன்பின்னர் நான் தான் அவரை பிடித்து காப்பாற்றினேன்” என்றார். நடிகர் ராம்கி, இரட்டை இயக்குநர்களான ராபர்ட் - ராஜசேகர் இயக்கிய 'சின்ன பூவே மெல்ல பேசு' திரைப்படம் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.
தொடர்ந்து, 'செந்தூர பூவே' , 'மருது பாண்டி' , 'இணைந்த கைகள்' போன்ற பல வெற்றிகரமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
ஒரு கட்டத்தில், சினிமா உலகில் இருந்து சிறிது காலம் விலகி இருந்த ராம்கி கடந்த 2013-ஆம் ஆண்டு 'மாசாணி' மற்றும் 'பிரியாணி' போன்ற படங்களில் துணை நடிகராக மீண்டும் நடிக்கத் தொடங்கினார். சமீபத்தில், 'லக்கி பாஸ்கர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார்.
மாவீரன் அலெக்சாண்டர் உலகம் முழுவதையும் தன் ஆட்சிக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்று நினைத்த காலம் அது. நிறைய யுத்தங்கள்... நிறைய படையெடுப்புகள்.. நிறைய சவால்கள்..
பாபிலோனியாவில் ஒரு முக்கியமான போரை தலைமை தாங்கி நடத்திச் சென்ற சமயம்.. கிழக்கு பக்கம் இன்னொரு மன்னன் அவரை எதிர்த்து படையெடுத்து வந்தான். ஆனால் அந்த மன்னனின் படைகள் சிறியது. அதனால் அந்த படைகளை எதிர்த்து தானே போகாமல் தன் தளபதிகளில் ஒருவரை அனுப்பி வைக்க எண்ணினார் அலெக்சாண்டர். படைகளை நடத்திச் செல்ல சரியான தளபதி யார் என மிகவும் யோசித்து பார்த்தார். அப்போது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அவரின் நான்கு தளபதிகளையும் தங்கள் குதிரையுடன் யூப்ரடீஸ் நதிக்கரைக்கு வரவழைத்தார்.
தங்களை அலெக்சாண்டர் வரவழைத்த காரணம் அவர்களுக்குத் தெரியும். அந்த யூப்ரடீஸ் நதிக்கரையில் காற்று வேகமாக வீசிக் கொண்டிருந்தது. தளபதிகள் நிற்கும் இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் இடப்பக்கம் ஒரு கொடி உள்ளது. அதேபோல் வலப்பக்கமும் ஒரு கொடி உள்ளது. இரண்டுமே அலெக்சாண்டரின் கொடிதான். இப்போது தளபதிகளிடம், " அதோ அங்கே தெரியும் கொடிதான் உங்கள் இலக்கு. நீங்கள் இடப்பக்கம் செல்ல விரும்பினால் இடப்பக்கம் செல்லலாம். வலப்பக்கம் செல்ல விரும்பினால் வலப்பக்கம் செல்லலாம். ஆனால் இலக்கை அடைய வேண்டும். இதுதான் போட்டி", என்றார். தளபதிகள் யோசித்து பார்த்தார்கள்.
அந்த இடத்தில் காற்று வேகமாக வீசுவதால் இடப்பக்கம் போனால் நேர்க்காற்றில் சீக்கிரம் இலக்கை அடையலாம். வலப்பக்கம் எதிர்க்காற்று.. இலக்கை அடைவது கடினம்.. அலெக்சாண்டர் அருகில் நின்ற அமைச்சருக்கு அங்கே நடப்பது எதுவும் புரியவில்லை. பந்தயக்கொடி அசைக்கப்பட்டவுடன் தளபதிகள் தங்கள் இலக்கை நோக்கி போகிறார்கள். இடப்பக்கம் இரண்டு பேரும், வலப்பக்கம் இரண்டு பேரும் சென்றார்கள். இடப்பக்கம் செல்பவர்கள் வேகமாக இலக்கை அடைந்தனர். வலப்பக்கம் சென்றவர்கள் பாதிதூரம் போகுறதுக்கே கஷ்டபட்டார்கள். ஆனாலும் இலக்கை அடைந்தனர்.
ஆனால் திரும்பி வரும் போது காற்றின் திசைகள் மாறுகிறது அல்லவா.. நேர்க்காற்றில் சென்றவர்கள் எதிர்க்காற்றிலும், எதிர்க்காற்றில் சென்றவர்கள் நேர்க்காற்றிலும் வர வேண்டும். எனவே நால்வரும் ஒரே நேரத்தில் அலெக்சாண்டரிடம் வந்து சேர்ந்தனர். அலெக்சாண்டர் நான்கு தளபதிகளையும் பார்த்தார். பின் இடப்பக்கம் சென்ற இரண்டு தளபதிகளையும் வீட்டிற்கு போக சொன்னார். அவர்களும் யோசித்து கொண்டே சென்றுவிட்டனர். மீதமிருந்த இருவரையும் தனித்தனியாக அழைத்தார்.
மூன்றாவது தளபதியிடம் "நீ ஏன் வலப்பக்கம் சென்றாய்" எனக் கேட்டார். அதற்கு அவன் "நீங்கள் ஒரு மாவீரர். எளிமையான வழியை எப்போதும் விரும்பமாட்டீர்கள். அதனால் சவாலான வழியைத் தேர்வு செய்தேன்" எனக் கூறினான். அதற்கு அலெக்சாண்டர் சிரித்துக் கொண்டே "போரைப் பொறுத்தவரை சுலபம், கஷ்டம்னு எதுவும் கிடையாது. வெற்றி, தோல்விதான் முக்கியம். உன்னை நம்பி படைகளை அனுப்ப முடியாது. நீ போகலாம்" எனக்கூறி அந்த தளபதியை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
நான்காவது தளபதியை வரவழைத்தார். அவனிடம், "நீயாவது காரணத்தோடு எதிர்க்காற்றில் போனாயா.. இல்லை இவர்களைப் போலத்தானா" எனக் கேட்டார். அதற்கு அவன் கூறிய பதில் மிகவும் சுவாரசியமாக இருந்தது.
"மாவீரர் அலெக்சாண்டர் அவர்களே.. நீங்கள் எதற்காக என்னை அழைத்தீர்கள்.. கிழக்கேயிருந்து வர படைகளை எதிர்த்து போர் புரிய ஒரு தளபதி வேண்டும். என் கணிப்புப்படி அந்தப் போர் கிழக்கு பக்கத்திலுள்ள பாலைவனத்தில் நடக்கும். பாலைவனத்தில் அதிகமாக காற்று அடிக்கும். அதில் நிலைத்து நின்று சண்டை போடும் திறன் யாருக்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கவே இந்த போட்டியை நடத்துனீங்கனு நான் யோசித்தேன். நீங்கள் சொன்ன போட்டி விதிமுறைகளை யோசித்தேன். இலக்கை அடைய வேண்டும் என்று கூறினீர்கள். யார் முதலில் அடைகிறார்களோ அவர்தான் வெற்றியாளர் என கூறவில்லை. எனவே நான் நினைத்தது சரியென உறுதிபடுத்தினேன். எப்படி அலெக்சாண்டர் அவர்களே.. எதிர்க்காற்றில் என்னுடைய குதிரை செலுத்தும் திறனை கவனீத்தீர்களா " எனக் கேட்டான்.
அவனை தட்டிக் கொடுத்த அலெக்சாண்டர் அவன் தலைமையில் படைகளை அனுப்பி வைத்தார். போரில் வெற்றியும் அடைந்தார்.
முதலில் பார்த்த இரண்டு தளபதிகள் மாதிரி நம்மில் பலர் எந்த காரியத்தை எதற்காக செய்கிறோம் என்று தெரியாமலேயே நம் உழைப்பை வீணாக்குகிறோம்.
ஒரு சிலர் அந்த மூன்றாவது தளபதி மாதிரி கடின உழைப்புதான் வெற்றி தரும் என நினைத்து, யோசிக்காமல் கடினமாக உழைக்கிறோம். வெற்றி கிடைக்காமல் கவலைப் படுகிறோம்.
வெகு சிலர் தான் நான்காவது தளபதி போல நாம் எதற்காக போராடுகிறோம். களம் எப்படி. எந்த மாதிரி உழைக்க வேண்டும் என்று யோசித்து செயல்படுகிறார்கள். வெற்றியும் அடைகின்றனர்.
இக்கதையைப் படிக்கும் நீங்களும் உங்கள் களத்தை ஆய்வு செய்து அதற்கேற்ப உழையுங்கள்..
வெற்றி கண்டிப்பாக கிடைக்கும்..
சார்லோட் பாய்னெ-டௌன்செண்ட் (Charlotte Payne-Townshend) என்ற சமூக சீர்திருத்தவாதியை திருமணம் செய்துகொண்டு அவருடனே வாழ்ந்தார். அவர்கள் ஷா'ஸ் கார்னர் (Shaw's Corner) என்று இன்று அழைக்கப்படும் ஆயோட் செயிண்ட்லாரன்ஸில் (Ayot St. Lawrence) உள்ள வீட்டில் வசித்துவந்தனர்.
கீழே விழுந்ததனால் பெற்ற காயங்கள் மோசமானதால் ஏற்பட்ட நாள்பட்ட சிக்கல்களால் பெர்னாட் ஷா தனது 94 ஆம் வயதில் இறந்தார்.
இலக்கியத்திற்கான நோபல்பரிசு (1925) மற்றும் ஆஸ்கார் (1938) விருது ஆகிய இரண்டையும் பெற்றவர் இன்றுவரை இவர் ஒருவரே.
அவர் இவ்வெகுமதிகளை முறையே இலக்கியத்திற்கான அவரது பங்களிப்புக்காகவும் பிக்மேலியன் என்னும் திரைப்படத்தின் பணிக்காகவும் பெற்றார். பொது வெகுமதிகளுக்கான ஆசை தனக்கு இல்லை என்பதால் பெர்னாட் ஷா உடனடியாக நோபல் பரிசை நிராகரிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் அவரது மனைவியின் வேண்டுகோள்படி ஏற்றுக்கொண்டார்: அவரது மனைவி அதை அயர்லாந்துக்கு கௌரவம் எனக் கருதினார். பரிசுத் தொகையை அவர் நிராகரித்து அதை ஸ்வீடிஷ் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கான நிதியாக அதைப் பயன்படுத்திக்கொள்ளக் கோரினார்.
இன்றைய ராசி பலன்கள் - 29.9.2025
மேஷம்
வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய மாற்றம் ஏற்படும். வெளி வட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகமும் வாய்ப்புகளும் ஏற்படும். வர்த்தக செயல்களில் சிந்தித்து செயல்படவும். ஆன்மிக பெரியோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உடன்பிறப்புகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். நண்பர்களின் உதவியின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
ரிஷபம்
பயணங்களால் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உருவாகும். உடல்நிலையில் தோன்றிய சங்கடம் நீங்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் அமையும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். சஞ்சலமான சிந்தனைகள் மனதளவில் குறையும். பழைய சிக்கல்கள் படிப்படியாக குறையும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மிதுனம்
எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். பூர்வீக சொத்துகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். கல்வியில் ஒரு விதமான ஆர்வமின்மை ஏற்படும். வித்தியாசமான கற்பனைகளால் புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். விளையாட்டு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கடகம்
நெருக்கமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குழந்தைகள் வழியில் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். புதிய பங்குதாரர்கள் சேர்ப்பது குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். கடன்களை தீர்ப்பதற்கான உதவிகள் கிடைக்கும். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
சிம்மம்
சிறு தூரப் பயணங்கள் மூலம் மனதில் மாற்றங்கள் உருவாகும். கடினமான விஷயங்களை சாதாரணமாக முடிப்பீர்கள். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். புதிய எலக்ட்ரானிக்கல் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கன்னி
சூழ்நிலை அறிந்து வாக்குறுதிகளை அளிக்கவும். அரசு காரியத்தில் சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நிதானமான செயல்பாடுகள் நன்மதிப்பை உருவாக்கும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். உணவு சார்ந்த துறைகளில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் புதிய இலக்குகள் பிறக்கும். தாமதம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
துலாம்
எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். வியாபாரம் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். முயற்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு
விருச்சிகம்
புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பயணங்களின் போது விவேகம் வேண்டும். சக ஊழியர்களால் சிறு சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
தனுசு
தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். ஆன்மிக பணிகளில் தனிப்பட்ட கவனம் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். புதிய கல்வி குறித்த தேடல்கள் அதிகரிக்கும். ஆதரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மகரம்
சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். உறவுகளின் பலம் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் இருந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். உடன் இருப்பவர்கள் ஆதரவால் நினைத்தது நிறைவேறும். விளையாட்டு செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
கும்பம்
வரவுகளில் இருந்த தடைகள் விலகும். புதிய விஷயங்களில் பொறுமை வேண்டும். மாணவர்களுக்கு பாடங்களில் சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும். அரசு வழியில் சாதகமான சூழல் அமையும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தடையாக இருந்தவர்களை பற்றிய புரிதல்கள் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மீனம்
விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு நீங்கும். சில பிரச்சனைகளுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது தெளிவை ஏற்படுத்தும். வேலையாட்களால் அலைச்சல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகள் இடத்தில் புரிதல் இன்மை உண்டாகும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு
விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 13 ஆம் தேதி திங்கட்கிழமை 29.9.2025
இன்று பிற்பகல் 01.41 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
இன்று அதிகாலை 02.24 வரை கேட்டை. பின்னர் மூலம்.
இன்று இரவு 11.12 வரை சௌபாக்கியம். பிறகு சோபனம்.
இன்று அதிகாலை 12.55 வரை கரசை. பிற்பகல் 01.41 வரை வனிசை. பின்னர் பத்தரை.
இன்று அதிகாலை 02.24 வரை மரண யோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.15 முதல் 07.15 மணி வரை
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 07.30 முதல் 08.30 மணி வரை
நண்பர் ஒரு பாங்குக்குள் நுழைகிறார் .
மேனேஜரிடம் " எனக்கு 5000/ கடன் வேணும் " என்கிறார்.
"உங்களை எனக்குப் பழக்கமில்லை ஏதாவது Collateral
குடுத்தா கடன் தரோம் "
" பேங்க் வாசலில் என்னுடைய புத்தம் புது ரோல்ஸ் ராய்ஸ் கார் நிக்குது. ஒரிஜினல் டாகுமெண்ட்ஸ் உள்ளேயே இருக்கு . அதை அடமானம் வச்சுக்கிட்டு கடன் குடுங்க "என்றார் நண்பர்.
கடன் உடனே வழங்கப்பட்டது . பாங்க் டிரைவர் காரை பத்திரமாக ஓட்டிச்சென்று பேஸ்மெண்டுல நிறுத்துகிறார் .
மானேஜரும் ஊழியர்களும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.
"வெறும் 5000துக்கு இவ்ளோ காஸ்டலி காரை அடமானம் வச்சுட்டுப் போறாரே ? ரொம்ப அப்பாவி ."
பல கோயில்கள் மற்றும் ஊட்டி போன்ற இடங்களுக்கு சென்றுவிட்டு, ஒரு மாதம் கழித்து வந்து 5000 + வட்டி 39 ரூபாய் கட்டி, வண்டியை எடுத்துக் கொள்கிறார் நண்பர்
" ஏன் சார் இவ்ளோ சின்ன தொகைக்கு இவ்ளோ காஸ்டலி காரை அடமானம் வச்சீங்க "ன்னு கேக்கறார் மானேஜர்.
" 39 ரூபாய்க்கு வேற யாரு சார் இந்த 2 கோடி காரை இவ்ளோ ஜாக்கிரதையா ஒரு மாசம் பாத்துப்பாங்க ?" என்றார் நண்பர்.
காது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.? கேட்பதற்கு என்பார்கள்.! ஆனால்...,
காது இன்னொரு விஷயத்தை செய்கிறது. அது மிக முக்கியமானது.
உங்க கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்கு காரணம் காது தான், மனிதன் மயங்கி சரிந்து விடாமல் மொத்தஉடல்அமைப்பையும் சமநிலை படுத்த காது மிக அவசியமாகிறது.
ஒரு பைக்கால் அதன் இரண்டு டயர்களால் நிற்க முடிவதில்லை ஏன்? மனிதன் மட்டும் எப்படி இரு கால்களால் நிற்கிறான்?
பைக் நிற்க்க கூடுதலாக ஸ்டாண்ட் தேவைப்படுகிறது, அதனால் தன்னை தானே சமநிலை படுத்திக்கொள்ள முடிவதில்லை.
ஆனால் மனிதனால் அது முடியும், அவன் வடிவம் நிற்க முடியாத நிலையில் இருந்தாலும் எந்த சக்தி அவனை சமநிலையுடம் நிற்க்க வைக்கிறது என்றால் அது அவன் காதில் உள்ள "காக்லியா" திரவத்தினால் தான்.
ஒரு டெட்பாடியை நிற்க வைக்க முடியுமா? முடியாது ஏன் எனில் அவன் சமநிலை தவறி விட்டான். அதே உயிருடன் இருப்பவனால் நிற்க முடிகிறது,
காது கேட்பதற்கும் காக்லியா திரவம் உதவுகிறது, ஒலி அலைகளை காது மடங்கல் உள்வாங்கி காக்லியாவை அதிர்வடைய வைத்து அந்த அலைகள் பல ஆயிரம் வழிகளில் அலைந்து திரிந்து மைக்ரோ நொடியில் உங்க மூளைக்கு சத்தங்களை உணர வைக்கிறது.
10 அல்லது 15 டெசிபல் சத்தங்கள் வரை காது கேட்க போதுமானது. அதை மீறும் போது காதில் பிரச்சினைகள் வரும்,
முதலில் மயக்கம், தலை சுற்றல் வாந்தி, மண்டை வலி என தொடர்ந்து இறுதியில் காது கேட்கும் திறன் குறைந்து விடும்.
காதின் மடல்கள் மிக அற்புதமான வடிவத்தில் ஆனது, மண்ணெண்ணெய் ஸ்டவில் புலன் வைக்காமல் அப்படியே எண்ணெய்யை ஊற்றினால் எப்படி சிதறி போகும்?
அதே போன்று தான் அந்த காது மடல்கள் இல்லா விட்டால். சத்தங்கள் நேரடியாக மண்டைக்குள் மோதி அதுவே உங்களை கொன்று விடும் அவ்வளவு வலியுடனானதாக இருக்கும்.
அதை தான் ஃபில்டர் செய்கிறது காது மடல்களும் அதை சுற்றி உள்ள சிக்கலான அமைப்புகளும்.
மிகஅற்புதமாக...!
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
தந்தை வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். வெளிநாட்டு வர்த்தகத்தில் சற்று கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். எதிர்காலம் குறித்த சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பதில் நன்மதிப்பை மேம்படுத்தும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
ரிஷபம்
குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் நீங்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு உண்டு.உடல் நிலையில் புதிய பொலிவுடனும் புத்துணர்வுடனும் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை மேம்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம்
எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். வழக்கு விஷயங்களில் சாதாரண முடிவுகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும். சோர்வு மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
கடகம்
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். திருத்தல பயணங்கள் சென்று வருவீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாடுகள் வரும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்களில் இருந்த தாமதங்கள் விலகும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் அமையும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
சிம்மம்
இடம் மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். எதிர்பாராத கடன் உதவிகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி
நினைத்த பணிகள் எதிர்பார்த்த விதத்தில் முடியும். தந்தை வழியில் ஆதரவு மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவுகளுடன் சுமுகமான சூழல்கள் அமையும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். தடைப்பட்டு வந்த வரவுகள் கிடைக்கும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
துலாம்
அரசு காரியங்களில் இருந்த தாமதங்கள் மறையும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கமானவர்களால் ஆதாயம் உண்டாகும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும். பண வரவில் இருந்த தடைகள் விலகும். இறைப்பணிகளில் ஆர்வம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விருச்சிகம்
குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது மாற்றத்தை ஏற்படுத்தும். வேலையாட்களின் ஒத்துழைப்புகளில் ஏற்ற இறக்கம் உண்டாகும். மறைமுகமான வதந்திகள் தோன்றி மறையும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு
எதிலும் திட்டமிட்டு செயல்படவும். உறவினர்கள் வழியில் நெருக்கடியான சூழல்கள் உண்டாகும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் சில மாற்றங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்த கட்டுப்பாடுகள் விலகும். சக ஊழியர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மகரம்
உயர்கல்வி குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்புகள் உயரும். மனதளவில் இருந்த கவலைகள் மறையும். வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல்கள் ஏற்படும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கும்பம்
எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அதிகாரிகளிடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். முயற்சிக்குண்டான பலன்கள் கிடைக்கும். பணி நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். வேலையாட்கள் மாற்ற செயல்களில் பொறுமை வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மீனம்
பணி நிமித்தமான அலைச்சல்கள் குறையும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். அரசு சார்ந்த காரியங்களில் பொறுமை வேண்டும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். கலைத்துறைகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 28.9.2025
இன்று பிற்பகல் 12.19 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.
இன்று அதிகாலை 12.09 வரை அனுஷம். பின்னர் கேட்டை.
இன்று இரவு 11.13 வரை ஆயுஷ்மான். பிறகு சௌபாக்கியம்.
இன்று பிற்பகல் 12.09 வரை தைத்தூலம். பின்னர் கரசை.
இன்று காலை 06.02 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.
நல்ல நேரம்:
காலை : 08.00 முதல் 09.00 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக ஸ்ரேயா சரண் இருக்கிறார். திருமணத்திற்கு பின் படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்டார். இந்த ஆண்டு சூர்யாவின் நடிப்பில் தமிழில் வெளிவந்த ரெட்ரோ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார்.
நடிகை ஸ்ரேயா சரண் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய பிரபலங்களில் ஒருவர். இந்த நிலையில், தனது மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கும் திருப்பாச்சேத்தியிலிருந்து தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கட்டிக்குளம் . அங்கு குப்பமுத்து வேளாளர், கூத்தாயி அம்மாள் ஆகியோரின் மகனாக காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரத்தில் (1855 ஜூலையில்) மாயாண்டி சுவாமிகள் அவதரித்தார் . சிறு வயது முதலே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
கட்டிக்குளத்தில் உள்ள அய்யனார் கோயிலின் பூசாரியாக இருந்த குப்பமுத்து வேளாளர் ஒரு நாள் தம் மகன் மாயாண்டியையும் பூசை செய்வதற்காக அழைத்துச் சென்றார் . வெளிக்கூடத்தில் மகனை உட்காரவைத்துவிட்டு உள்ளே சென்று பூசைகளைச் செய்துவிட்டுத் திரும்பியவர் அதிர்ச்சியடைந்தார் .
குத்துக்காலிட்டுத் தியானத்தில் அமர்ந்திருந்த சிறுவன் மாயாண்டியின் தலைக்கு மேலே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடாமல் அசையாமல் இருந்தது. அதன் உடற் பகுதியும் வால் பகுதியும் சிறுவனின் உடலைச் சுற்றி இருந்தன. கடும் விஷம் உள்ள நாகம் மகனைக் கொத்திவிடப் போகிறதோ என்கிற பீதியில், ஐயனாரப்பா எம் மகனைக் காப்பாத்து என்று கருவறையை நோக்கி ஓங்கிக் குரல் கொடுத்தார் குப்பமுத்து. பிஞ்சு மகனைப் பார்க்க வாஞ்சையுடனும் பயத்துடனும் திரும்பினார். என்னே அதிசயம்! நாகத்தைக் காணோம். தியானத்தில் இருந்து அப்போதுதான் மீண்டிருந்தான் மாயாண்டி. மகனிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருக்கிறது என்பதை அப்போது உணர்ந்துகொண்ட குப்பமுத்து, அவனை அப்படியே வாரி அணைத்துக்கொண்டார். இதே போன்ற சம்பவங்கள் பின்வந்த நாட்களிலும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் விஷயம் ஊருக்குள் பரவி, மாயாண்டியை ஒரு தெய்வ சக்தியாகவே அனைவரும் பார்க்க ஆரம்பித்தனர்
சிறு வயதில் மாயாண்டி சுவாமிகள், சித்தர் பாடல்களைத் தேடித் தேடிப் படிப்பதையும் அடிக்கடி ஆலய யாத்திரைகள் சென்று வருவதையும் கண்டு அச்சமுற்ற பெற்றோர் அவருக்குத் திருமணமும் செய்து வைத்தனர். இருப்பினும் அவரது ஆன்மிகத் தேடல் குறையவில்லை. அவர் தமது தேடல்களுக்குச் சரியான வழிகாட்டும் குரு ஒருவரைத் தேடியலைந்தார். இறைவன் அதற்கும் வழிகாட்டினான்.
மாயாண்டி சுவாமிகளை இறைவன் எந்தப் பணிக்காக அனுப்பி இருக்கிறான் என்பது, அவனுக்கு மட்டும்தானே தெரியும்?! இல்லறத்திலேயே இவன் இருந்து விட்டால், எதிர்கால சமுதாயத்துக்கு என்ன பயனைச் செய்துவிட முடியும்? மாயாண்டியை இறைவன் ஆட்கொண்டான். விளைவு- இல்லறம் இனிக்கவில்லை. தவத்திலும் யோகத்திலும் காலத்தை ஓட்டினார். சிட்டாய்ப் பறக்க விரும்பினார். தவத்திலும் சமாதி நிலையில் உடல் கூட வேண்டும் என்று விரும்பினார். அதற்கு முன் தீட்சை பெற வேண்டுமே! உபதேசம் செய்வதற்கு ஒரு குரு வேண்டுமே! இந்த வேளையில்தான் ராமேஸ்வரத்துக்கு யாத்திரை சென்று கொண்டிருந்த தஞ்சாக்கூர் செல்லப்ப சுவாமிகள் என்பவர், கட்டிக்குளம் வந்தார்.
அவரைச் சந்தித்த மாயாண்டி சுவாமிகள் அவரிடம் தம் விருப்பத்தைக் கூறியதும் உடனே அவருக்குத் தீட்சையளித்தார். அந்த நிமிடமே அனைத்தையும் துறந்த மாயாண்டி சுவாமிகள் கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார்.
பல புனித ஸ்தலங்களுக்குச் சென்று யோக சமாதியில் ஆழ்ந்த அவர் இறுதியாகத் திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலைக்கு வந்து சேர்ந்தார்.(இன்றைக்கும் காகபுஜண்டர் அந்த மலையில் யோக சாமதியில் இருப்பதாகக் கூறப்படுகிறது). அந்த மலையில் அரூபமாக இருக்கும் சித்தர்கள் அவரை வரவேற்று, இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடும்படி அருளாசி கூறினர் . அதன்படி மாயாண்டி சுவாமிகள் அங்கிருக்கும் குகை ஒன்றில் லிங்கம் ஒன்றைப் பிரிதிஷ்டை செய்து யோக சமாதியில் ஆழ்ந்து அட்டமாசித்திகளையும் பெற்றார் .
மாயாண்டி சுவாமிகளின் வாழ்க்கையில் நடந்த அற்புதங்கள் எண்ணற்றவை.
ஒருநாள் சுவாமிகள் மதுரைக்கு அருகே ஒரு சிறு கிராமத்தில் வசித்த பிராமணத்துக் தம்பதியினரின் இல்லத்திற்குள் திடீரென நுழைந்தார் . அத்தம்பதியினரிடம், “உங்களுக்குப் பத்தாவதாக ஒரு பிள்ளை பிறக்கப்போகிறது . அதற்குச் சுப்பிரமணி என்று பெயர் வை .ஆனால் அவன் சில காலம் மட்டும் உங்களுடன் இருப்பான் . பின்னர் அவனை இந்த உலகமே கொண்டாடும்” என்று ஆசி வழங்கினார் . அதன்படி பிறந்த சுப்பிரமணி தான் பின்னர் சுவாமிகளிடம் தீட்சை பெற்று ‘சாந்தானந்த சுவாமிகள்’ ஆனார். சேலம் புதுக்கோட்டை போன்ற இடங்களில் உள்ள ‘ஸ்கந்தாஸ்ரமம்’ அமைத்துப் பக்தர்களின் குறைகளைத் தீர்த்தார் .
ஒருமுறை சுவாமிகள் நாகப்பட்டினம் சென்றிருந்தார். சுவாமிகளைத் தரிசித்துத் திருநீறு பெறுவதற்காகப் பெரும் கூட்டம் கூடியிருந்தது . அப்போது ஒரு சிறுவன் திருநீறு வாங்குவதற்காக நீட்டிய கையைத் தொட்டதும் சுவாமிகள் மகிழ்ச்சியுடன் “நீ யோகக்காரனப்பா! உன் பேச்சைக் கேட்கப் பணத்தைக் கொட்டிக் கொடுப்பார்கள் .
அதனைக் கொண்டு ஏராளமான ஆலயங்களுக்குத் திருப்பணிகள் செய்யும் யோகமும் உனக்கு இருக்கிறது” என்று கூறி ஆசிர்வதித்தார் . அந்தச் சிறுவன்தான் பின்னாளில் திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள் எனப் புகழ் பெற்றார் . சுவாமிகள் கூறியபடி சுமார் நாற்பது திருத்தலங்களுக்குத் திருப்பணிகளும் செய்தார்.
சுவாமிகளின் நெருங்கிய சீடரான இருளப்பக் கோனார் சுவாமிகளின் அறிவுரையின்படி திருக்கூடல் மலையில், தண்டாயுதபாணியின் சொரூபத்தைப் பிரதிஷ்டை செய்தார். இப்போது அங்கு பெரும் ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது. சுவாமிகளிடம் தீட்சை பெற்றுச் சீடர்கள் பலர் சித்தரானார்கள். கற்றங்குடி ரெட்டி சுவாமிகள், மூக்கையா சுவாமிகள், கச்சைகட்டி சுவாமிகள், வேலம்மாள், முத்துமாணிக்கம் சுவாமிகள், சோமப்பா சுவாமிகள், சாந்தானந்த சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
நீரின் மீது நடந்தது தண்ணீரில் விளக் கேற்றியது போன்ற பல சித்துக்களைச் செய்த மாயாண்டி சுவாமிகள் 1928-ம் ஆண்டு புரட்டாசி மாதம் ஆறாம் தேதி, தமது பக்தர்களிடம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அடக்கம் ஏற்படும் என்று தெரிவித்தார் . அடக்கம் செய்ய வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டு அங்கே சமாதிக் குழியும் வெட்டச் செய்தார் .
சுவாமிகள் கூறியபடி 1930-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 11-ம் தேதி இரவு இருளப்பக் கோனாரின் இடது தோளில் சாய்ந்து “அப்பு இந்தச் சட்டையைக் கழற்றிவிடலாமா?” என்று கேட்டுவிட்டுச் சமாதியானார் . சமாதிக் குழிக்குள் சுவாமிகளின் பூத உடலை வைக்கும்போது அவரது ஜீவநாடி ஓடிக்கொண்டிருந்ததாம் . சுவாமிகளின் விருப்பப்படி அவரது சமாதிப் பீடத்தில் சுவாமிகள் பூசித்துவந்த விநாயகரின் சொரூபம் பிரதிஷ்டை செய்யப்பட்டது .
திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலையில் காகபுஜண்டர் இன்றும் அரூபமாக யோக சமாதியில் இருக்கின்றார் என்றும் அங்கு பல சித்தர்கள் அரூபமாக வாழ்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது . இப்படிப்பட்ட புனிதமான அந்த மலையின் அடிவாரத்தில் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதியடைந்து அதனை மேலும் புனிதமாக்கியிருக்கிறார் .
அதென்ன சூட்டுக்கோல்? இவர் கையில் வைத்திருக்கும் சூட்டுக்கோல் நல்லவர்களுக்கு நன்மை தருவதாகவும் தீயவர்களுக்குத் தண்டனை தருவதாகவும் இருந்தது. ராமலிங்க சுவாமிகளின் காலத்துக்குப் பிறகு இந்த சூட்டுக்கோல் அவரின் சீடரான செல்லப்ப சுவாமிகளிடமும் அதன் பின் அவருடைய சீடரான மாயாண்டி சுவாமிகளிடமும் வந்தது. இன்றைக்கும் இந்தச் சூட்டுக்கோலை மாயாண்டி சுவாமிகளின் சமாதியில் தரிசிக்கலாம்.
எப்படி செல்வது?
மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டு, அங்கிருந்து பத்து நிமிடங்கள் நடந்தால், காகபுசுண்டர் மலை வந்துவிடும். இங்கு தான் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்றும் சோமப்ப சுவாமிகள் ஜீவ சமாதி அமைந்துள்ளது.
ஒரு தனியார் ஆஸ்பித்திரியில் ஐ.சி.யு வார்டில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட படுக்கையில் மட்டும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையிலும் சரியாக 11மணிக்கு அந்த படுக்கையில் படுத்திருக்கும் நோயாளிகள் இறந்து போகிறார்கள். இது அந்த ஆஸ்பத்திரியில் இருக்கும் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் அளித்தது.
பல நாடுகளிலிருந்து மிக சிறந்த மருத்துவர்களும் வந்து பார்த்துவிட்டு இறப்புகளுக்கு காரணம் தெரியாமல் குழம்பினர். மீண்டும் ஒரு ஞாயிற்று கிழமையில் என்ன தான் நடக்கிறது என்று பார்க்க மிக பெரிய மருத்துவ குழு ஒன்று 11மணிக்கு முன்னால் அந்த குறிப்பிட்ட படுக்கையை சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். என்ண ஆக போகிறதோ என்று அன்னைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்க.....
திடிரென உள்ளே நுழைந்தாள் ஞாயிற்று கிழமையில் மட்டும் பகுதி நேரமாக கூட்டி, பெருக்கும் வேலை செய்யும் முணியம்மா... வந்தவுடனையே நோயாளியின் ஆக்சிஜன் சப்ளை இயந்திரத்தின் PLUGகை பிடுங்கிவிட்டு தனது செல் போனை சார்ஜில் போட்டுவிட்டு கடமையே கண்ணாக அந்த அறையை பெருக்க ஆரம்பித்தாள்...
பிளாக் டைமண்ட் ஸ்டுடியோ சார்பில் சையத் ஜாஃபர் தயாரிப்பில், சகு பாண்டியன் இயக்கத்தில் ரத்தன் மௌலி, யாஷிகா ஆனந்த், விஜய் டிவி புகழ் யோகி, தேஜா ஸ்ரீ, சஞ்சய் ஷங்கர் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் ‘டாஸ்’ (TOSS). இந்த படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா படக்குழுவினர் கலந்து கொள்ள கோவில்பட்டியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த பூஜை மற்றும் துவக்க விழாவில் முன்னாள் அமைச்சர் திரு. கடம்பூர் C ராஜூ MLA அவர்கள் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார்.
படத்தை பற்றி இயக்குனர் சகு பாண்டியன் கூறியதாவது: மர்மமான முறையில் மூன்று கொலைகள் நிகழ்கின்றன. அந்த கொலைகளின் பின்னணி என்ன? யாஷிகா ஆனந்துக்கும் கொலைகளுக்கும் என்ன தொடர்பு என்பதை சொல்லும் ஒரு கிரைம் திரில்லர் படமாக உருவாக இருக்கிறது. யாஷிகா ஆனந்த் நாயகியாக நடிக்கிறார். தெலுங்கு திரையுலகில் இருந்து வந்திருக்கும் தேஜா ஸ்ரீ இன்னொரு நாயகியாக நடிக்கிறார். கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர் பகுதிகளில் ஒரே கட்டமாக 25 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். இந்த ஊர் மக்களின் ஆதரவும், அன்பும் எங்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது.
முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி MLA-வுமான திரு.கடம்பூர் C ராஜூ அவர்கள் பூஜைக்கு வந்திருந்து எங்கள் குழுவை வாழ்த்தியதோடு, படப்பிடிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்திருக்கிறார். TOSS என்ற தலைப்பே எளிதில் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது எனவும் எங்களை பாராட்டினார்.
விரைவில் படப்பிடிப்பை முடித்து விட்டு 2025 இறுதியில் அல்லது 2026 துவக்கத்தில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.